உங்களை வரவேற்கிறோம்!
வழி, சத்தியம், ஜீவன்
நேரடி ஸ்ட்ரீம் தொடங்கும்:
-
0நாட்களில்
-
0மணி
-
0நிமிடங்கள்
-
0நொடிகள்
நீங்கள் எங்களோடு கலந்து கொள்வீர்கள் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.
எங்கள் சபையானது தேவனை உணரக்கூடிய ஓர் இடமாக இருக்கின்றது. அதோடு, இந்த இடமானது உங்களைச் சார்ந்த ஓர் இடமாகவும் இருக்கின்றது. நாம் அதிக எண்ணிக்கையுடைய ஜனங்களாக இருக்கின்றோம் – ஒரு குடும்பமாகவும் இருக்கின்றோம்! நீங்கள் யாராக இருந்தாலும், இந்த சபை உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களை மேலும் அறிந்து கொள்ள எங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது.
முழுமைப்பெற்ற சுவிசேஷம்
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்,’’ என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். ஆனால், கடந்த பத்தொண்பது நூற்றாண்டாக, மனிதர்கள் தேவனின் அசலான சித்தத்தை மறந்து போயிருக்கிறார்கள். கர்த்தரின் வார்த்தைக்கும் அவர் வாழ்ந்து காட்டினவற்றிற்கும் கீழ்ப்படிந்து மெய்யான சத்தியத்திற்கு மீண்டுமாகத் திரும்புவதால், நம்மால் அவர் கொடுத்த வாக்குத்தத்தை முழுவதுமாக உணர முடியுமா? அதுமட்டுமில்லாமல், நாம் எந்த சபையைச் சார்ந்தவர்களாக இருக்கிறோம் என்பதும் இங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. எந்த சபை சத்தியத்தைக் காத்து அதன்படி பின்பற்றி நடக்கிறதோ அந்த சபையைச் சார்ந்தவர்களாகவே நாம் இருக்கிறோம்.