Skip to content

இயேசு கிறிஸ்து

யார் இயேசு?

  • தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்.
  • பெத்தலகேம், யூதேயா (பாலஸ்தீனம்) தேசத்தில், 8-4 கி.மு மத்தியில் பிறந்தார்.
  • கொல்கதாவில் (“கபாலஸ்தலம்” = கல்வாரியா, இலத்தீன், அல்லது கல்வாரி) சிலுவை மரணமுற்றார்.
  • மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்தார். தம் சீஷர்கள் மற்றும் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார். (1 கொரி 15:6)
  • இயேசு = யெ‌ஷுஹா (எபிரேயு), “காக்கும் கர்த்தர்”
  • கிறிஸ்து = கிரேக்கில் கிறிஸ்தோஸ், எபிரேயுவில் மெசியா, “ஆசிர்வதிக்கப்பட்டவர்” எனும் ஒரு பட்டமாகும்.
img01

பூமியில் அவரது குறுகிய முப்பத்து மூன்று ஆண்டுகளில், இயேசு கிறிஸ்து, யாரும் அதுவரை கண்டிராத கிரியைகளை நிகழ்த்தினார்.

அவர் தண்ணீர் மீது நடந்தார். அவர் புயல்காற்றை அடக்கினார். அவர் குருடர், கைகால் முடமானவர்கள் போன்ற எல்லாவித உபாதை கொண்டவர்களையும் குணப்படுத்தினார். அவர் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களையும் கொண்டு ஆயிரக்கணக்கானோரின் பசி ஆற்றினார். அவர் இறந்தவர்களை கூட உயிர்ப்பித்தார்.

— யோவான் 14:6 14:6

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.

யோவான் 14:6 14:6

அவர் பக்திவாய்ந்தவர்கள் மத்தியிலோ, ஆற்றல் மிக்க சிறந்தவர்கள் மத்தியிலோ வாழவில்லை. மாறாக ஒடுக்கபட்டவர்களுக்கும், பாவிகளுக்கும், நோயாளிகளுக்கும் இடையில் வாழ்ந்தார். நாம் சந்திக்கும் அனைத்து லௌகீக தேவைகளையும் இன்னலையும் அவரும் அநுபவித்தார்: பசி, தாகம், அயர்வு, சோதனை, துயர் மற்றும் நிராகரிப்பு.

இயேசு மாம்சமும் இரத்தமுமாயிருந்தும், அவரின் வாழ்க்கை முழுதும் தேவனின் உறுதியான பிரதிபலிப்பும் வெளிப்பாடுமாயிருந்தது. அவர் சிறுபிள்ளைகளை தம் கரங்களில் ஏற்றுக்கொள்ளுகிறார். அவர் ஆலயத்திற்குள் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள் மீது கோபமூண்டார். சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்களை இரட்சித்தார். தம் வாழ்வின் முற்று வரையிலும் பேரன்பும் பரிவிரக்கமும் காண்பித்தார். சிலுவையில் தொங்கியவாரே, தம்மை துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார், தம் தாயாரை ஒருவர் கவனித்துக்கொள்வதை உறுதிபடுத்திக்கொண்டார், மற்றும் தம் அண்டை சிலுவையில் அறையப்பட்டிருந்த திருடர்களுக்கு ஆறுதல் அருளினார்.

இயேசு கிறிஸ்து வரலாற்றில் ஒரு கட்டத்தில் பிறந்த ஒருவர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த ஆன்மீகத் தலைவருக்கும் மேலானவர். அவர் யாவருக்கும் தேவனுடைய இராஜியத்தைக்குறித்தும், அதை எவ்வாறு அவர் மூலம் சுதந்தரித்துக்கொள்வது என்பதையும் போதித்தார்.

அதற்கு இயேசு: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்,’’ என்றார் (யோவான் 14:6). அவர் வெளிச்சமாகவும், வாசலாகவும், நமது மேய்ப்பராகவும் இருக்கிறார். அவரை நாம் அறிந்தோமானால், பிதாவையும் நாம் அறிந்திருக்கிறோம். “என்னில் விசுவாசமாய் இரு, நீ மரிக்காமல் இருப்பாய்,’’ என்கிறார் அவர்.

ஏன்? இயேசு கிறிஸ்து ஜீவனுள்ளவராகவும் என்றைக்குமுள்ளவராகவும் இருக்கிறார். இயேசு பாவங்களை மன்னிப்பதற்கும், குணமாக்குவதற்கும், குற்றவாளிகளைத் தீர்ப்பதற்குமாகிய எல்லா வல்லமையுடையவராக இருக்கிறார். அவர் ஆவிகளுக்கும், இயற்கையின் சக்திக்கும், பிறப்பு, மரணம் ஆகிய எல்லாவற்றிற்கும் எதிராகவும் கட்டளையிடுபவராகவும் இருக்கிறார். “ஆபிரகாம் உண்ட்கிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்,’’ என்கிறார் கர்த்தர் (யோவான் 8: 58). தொடக்கத்திலிருந்து இன்று வரையிலும் அவர் ஒருவரே சிருஷ்டகர். அதுமட்டுமில்லாமல், இறுதி நாட்களில் கூடியிருக்கும் அனைத்து ஜீவன்களையும் அவர் நியாயந்தீர்ப்பவராகவும் இருக்கிறார்.

இயேசுதான் உண்மையான தேவன் என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது?

i. அவர் பழைய ஏற்பாட்டிலுள்ள தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியிருக்கிறார்.

பல வருடங்களுக்கு முன்னதாக அவர் பிறந்தபோதிலும் மேசியாவின் வருகையைக் குறித்தும், அவருடைய திட்டத்தைக் குறித்தும் அவரின் வாழ்க்கையைக் குறித்தும் பல எழுத்தாளர்கள் அதனையொட்டிய தீர்க்கதரிசனங்களைச் சொல்லியிருக்கின்றனர். ’’அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானப்பிரபு எனப்படும்,’’ என்று ஏசாயா கூறினார் (ஏசாயா 9:6). மேசியாவைக் குறித்தான அனைத்து தீர்க்கதரிசனங்களையும் இயேசுவின் வாழ்க்கையானது ஒவ்வொன்றாக நிறைவேற்றியது.

  • அவர் ஒரு கன்னிகைக்குக் குமாரனாகவும் (ஏசாயா 7:14, 700 கி.மு) பெத்லகேமிலும், ஆப்ரகாமின் சந்ததியிலும் (ஆதியாகமம் 12:1-3), தாவீதின் வீட்டிலும் பிறப்பார் (2 சாமுவேல் 7:12).
  • அவர் தமக்கு முன்பாக ஒரு தூதனை அனுப்புவார் (மல்கியா 3:1,4-5).
  • முப்பது வெள்ளி காசுக்காக (சகரியா 11:12) தாம் நம்பின பிராணசிநேகிதனின் மூலம் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார் (சங்கீதம் 41:9).
  • தம்மைக் குற்றம் சாட்டினவர்களுக்கு முன்பாக அவர் தம் வாயைத் திறக்காமல் இருந்தார்.
  • அவர் பரியாசம் பண்ணப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார் (சகரியா 12:10, சங்கீதம் 22:7)
  • அவர் உயிர்த்தெழுந்து (சங்கீதம் 16:10), பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் (சங்கிதாம் 68:18).

ii. அவர் தேவத்துவமான அற்புதங்களைச் செய்தார்.

தேவன் செய்த பல அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டால் மட்டுமே விசுவாசிக்கிறவர்களும் (யோவான் 4:48) இயேசு கர்த்தரிடமிருந்து வந்தார் என்றும் தீர்த்தரிசனங்கள் கூறின மேசியா அவர்தான் என்பதையும் அறியாமல் பல அவிசுவாசிகள் இருந்தனர் (ஏசாயா 35:5-6). யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் வந்து, ‘’ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான்,’’ என்றான் (யோவான் 3:2).

iii. அவர் உயிர்த்தெழுந்தார்.

“இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள்,’’ என்று இயேசு அவரது சரீரத்தைக் குறித்து சொன்னார், ‘’மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்,’’ என்றும் கூறினார் (யோவான் 2:19). இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம்பண்ணப்பட்ட மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார். அவர் உயிர்த்தெழுந்திருப்பத்தைக் காண்பிக்க அவர் தமது சீடர்களுக்கு முன்பாகத் தம்மை வெளிப்படுத்தினார்; அவர்களிடம் தமது காயத்தைக் காட்டினார்; அவர்களோடு போஜனமும் பண்ணினார். அதுதான் வரலாற்றிலே முதன்முறையாக இப்படிப்பட்டதான சம்பவம் நடந்தது. பிற எந்த மதத்தினரும் இந்த சம்பவத்தைக் குறித்து உரிமை கொண்டாட முடியாது.”

iv. அவர் நமக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுத்தார்.

அவர் போனபின்பு, தமது சீடர்களை வழிநடத்த ஒரு தேற்றரவாளனை அனுப்புவதாக இயேசு தமது சீடர்களுக்கு வாக்குதத்தம் கொடுத்திருந்தார் (யோவான் 16:7). இயேசு தமது பிதாவினிடத்திற்குத் திரும்பி சென்று விட்டு, அவர் வாக்குதத்தம் செய்த பரிசுத்த ஆவியை அனுப்பியிருக்கிறதை இந்த பரிசுத்த ஆவியின் பொழிதலானது உறுதிப்படுத்துகிறது (அப்போஸ்தலர் 2:33). தேவன் நமக்கு வாக்குதத்தம் கொடுத்தப்படியால் இன்றைக்கு நாமும் கூட பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஆதாரமாக நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற விசுவாசிகள் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, அப்போஸ்தலர்களைப் போலவே அந்நிய பாஷைகளில் பேசுவதைக் காணலாம் (அப்போஸ்தலர் 2:4). இதனால், சிலரின் நோய்களும்கூட குணமடைந்தது.

v. அவரைப் பின்பற்றுபவர்கள் சாட்சியாக இருக்கிறனர்

யூதர்களின் கண்டிப்பான ஏகத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அந்த மனிதனாகிய இயேசு தேவன் என்று “புராணத்தை” யாரும் அவ்வளவு எளிதில் விசுவாசிக்க வாய்ப்பில்லை. ஆயினும் கூட யூத ஆட்சியாளர்களில் – நிக்கோடெமஸ் போன்ற நன்கு படித்த ஒருவர் உட்பட – இயேசுவை விசுவாசிதார்கள் (யோவான் 12:42)

இயேசு கைது செய்யப்பட்டபோது, ​​அவருடைய சீடர்கள் சிதறி ஒளிந்து கொண்டனர். அதிகாரிகளுடன் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க பேதுரு மூன்று முறை இயேசுவை மறுத்தலித்தான். ஆயினும், அவரது மரணம் மற்றும் அடக்கம் செய்யப்பட்ட சில மாதங்களுக்குள், பேதுருவும் மற்ற சீடர்களும் பயமின்றி இயேசுவும் அவரின் உயிர்த்தெழுதலையும் பற்றி பிரசங்கித்தார்கள். இயேசுவிற்கு மரண தண்டனை விதித்த அதே மக்கள் முன் அவர்கள் அவ்வாறு செய்தனர். அதிகாரிகள் கூட அவர்களின் தைரியத்தைக் கண்டு வியந்து போனார்கள் (அபோஸ்தலர் 4:13)

அப்போஸ்தலர்கள் அச்சுறுத்தபட்டாலும், அடித்து சிறையில் அடைக்கப்பட்டாலும், கல்லெறிந்தாலும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். அவர்களில் இந்த வியத்தகு மாற்றம், மற்றும் அசாதாரணமான அழுத்தம் இருந்தபோதிலும் அவர்கள் நிலைத்திருப்பது அவர்களின் கூற்றுகளின் உண்மைக்கு சாட்சியமளிக்கிறது. தங்களை அச்சுறுத்திய ஆட்சியாளர்ளிடம், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறேதே அவசியமானது” என்று கூறினார்கள் (அப்போ 5:29)

vi. அவர் ஜெபத்தை செவி சாய்த்து பதிலளிக்கிறார்

இயேசுவின் பணி இன்றும் தொடர்கிறது. அவரைத் தேடுவோரின் ஜெபங்களுக்கு கர்த்தர் பதிலளிக்கிறார். அவரது பெயரில், போதை பழக்கங்கள் வெல்லப்படுகின்றன, நோய்கள் குணமாகும் மற்றும் வாழ்க்கை மாற்றப்படுகிறது. ஜீவனுள்ள தேவனின் வல்லமை, அதிகாரம் மற்றும் நித்திய வார்த்தைகளுக்கு இவை சாட்சியமளிக்கின்றன.

பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஒரே "நபரா”?

— யோவான்n 10:38

நீங்கள் என்னை விசுவாசியாமல் போனாலும், என் கிரியைகளை நம்புங்கள், அதனால் பிதா என்னிலும், நான் அவரிலும் இருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும்

யோவான்n 10:38

கர்த்தரை “நபர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தவறானது. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஒரே தேவன் மற்றும் ஒரே ஆவி, மற்றும் குமாரனின் ஆவி பிதாவின் ஆவி மற்றும் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் பரிசுத்த ஆவியானவர்:

  • கர்த்தர் ஒருவரே, மற்றும் குமாரன், பிதா அல்லது பரிசுத்த ஆவி என்பதை வேதம் கூறிக்கவில்லை.
  • தேவனின் முழுமை கிறிஸ்துவில் காணப்படுகிறது (கொ1: 19, 2:9). பிதா தன்னுள் இருப்பதாக கர்த்தராகிய இயேசுவும் கூறியிருக்கிறார் (யோவான் 10:38, 14:10,11)
  • இயேசு கிறிஸ்து, தேவனின் குமாரன் தந்தையுடன் அடையாளம் காணப்பண்ட்டன (ஏசாயா 9:6; யோவான் 10:30,14:9)
  • கர்த்தராகிய இயேசு தன்னை பரிசுத்த ஆவி என்று மறைமுகமாக அடையாளம் காட்டினார். பரிசுத்த ஆவியின் வருகையைப் பற்றி குறிப்பிடுகையில், கர்த்தராகிய இயேசு, “நான் உங்களிடம் வருவேன்”(யோவான் 14:18) மற்றும் “சிறிது நேரத்தில், நீங்கள் என்னை காண்பிர்கள்”(யோவான் 16:17)
  • வேதாகமம் பரிசுத்த ஆவியை கர்த்தரின் ஆவி என்று அழைக்கிறது (அப். 16: 7; ரோ. 8: 9; கலா 4: 6; பில் 1:19; 1 பேது 1:11). பரிசுத்த ஆவி பிதாவின் ஆவி என்றும் அழைக்கப்படுகிறது (மத் 10:20), கர்த்தரின் ஆவி (மத் 3:16; ரோ. 8: 9, 8:13, 14; 1 கொரி 2:11, 3:16, 6 : 11, 12: 3; பிலி 3: 3; 1 யோ 4:13, 3:24), அல்லது தேவனின் பரிசுத்த ஆவி (எபே 4:30; 1 தெஸ் 4: 8). எனவே பரிசுத்த ஆவியானது குமாரனின் ஆவி மற்றும் பிதாவின் ஆவியானது.
  • இயேசுவின் பணி பெரும்பாலும் பிதா அல்லது ஆவியின் காரணமாகும், மற்றும் நேர்மாறாக இருக்கும்
    • விசுவாசிகளில் வாசமாய் இருக்கிற பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் ஆவி மற்றும் கிறிஸ்துவின் ஆவி என்றும் அழைக்கப்படுகிறன (ரோ 8:9-11)
    • பிதாவால் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் (கலா 1: 1) கிறிஸ்துவால் செய்யப்பட்டது
    • இயேசு ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார் (யோ 14:14) மற்றும் தந்தை ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார் (யோ 15:16)
    • பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்காக பேசுவார் (மாற்கு 13:11), இந்த பரிசுத்த ஆவியானவர் பிதாவின் ஆவி (மத்தே 10:20) மற்றும் இயேசுதாமே (லூக்கா 21:15).